மீண்டும் அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ! ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு! அதிர்ச்சியில் தினகரன்!  - Seithipunal
Seithipunal


ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பை தொடர்ந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் தங்க தமிழ்ச்செல்வன் செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவில் இணைந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஒருவர் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏகளில் ஒருவரான சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்பிரமணியன், தினகரன் தொடங்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கட்சியில் பயணித்து வந்தார்.

இந்த நிலையில் அமமுக கட்சியிலிருந்து விலக முடிவு செய்து அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். இன்று அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருடன் அவருடைய மகன் விக்னேஷ் அதிமுகவில் இணைந்தார். அந்த இணைப்பின் பொழுது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார். 

ஏற்கனவே விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ் ஜி சுப்பிரமணியம் அதிமுகவில் இணைந்து இருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK SG Subramaniyan Join ADMK infront of OPS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->