அமமுகவினருக்கு மாநாட்டை அறிவித்தார் டிடிவி தினகரன்.!
ammk meeting announced by dinakaran
அமமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
"அன்புதான் உலகின் ஆகப் பெரிய சக்தி" எனப் போதித்த இயேசு பெருமகன் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாடு வருகிற 21-12-2019 அன்று மாலை 06:00 மணியளவில் நடைபெற உள்ளது. அருமனையில் நடைபெறும் இவ்விழாவில் அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்கிறார்.
இந்நிகழ்வில் அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி கழகம், ஒன்றிய கழகம், நகர கழகம், பேரூர் கழகம், வட்ட கழகம், ஊராட்சி கழகம், கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது.
English Summary
ammk meeting announced by dinakaran