முக்கிய நிர்வாகியை கட்சிலிருந்து நீக்கி அதிரடி காட்டிய தினகரன்!! அடுத்தடுத்து அ.ம.மு.க-வில் ஏற்படும் மாற்றம்!!
ammk district secretary remove from ammk party
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக சரவணன் பொறுப்பு வகித்து வந்தார், அவர் அமமுகவிற்கு விரோதமாக செயல்படுவதாக தென்சென்னை நிர்வாகிகள் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.ம.மு.க-வின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையில் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேளச்சேரி சரவணன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ammk district secretary remove from ammk party