அமமுக மாவட்ட செயலாளர் ராஜினாமா! தலைமை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!
AMMK Dindigul east
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரின் ராஜினாமாவை, அக்கட்சியின் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட
கழக பொறுப்பாளராக,
திரு.K.P.நல்லசாமி அவர்கள்
(திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர்) இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
இதுவரை, திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருந்த திரு.P.ராமுதேவர் அவர்கள், உடல்நிலை காரணமாக மாவட்ட கழக செயலாளர் பொறுப்பலிருந்து தம்மை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.