தினகரனின் மொத்த நிர்வாகிகளையும் அள்ளிட்டு வந்த அமைச்சர்! அதிர்ச்சியில் அமமுகவினர்!
AMMK administrators join ADMK in front of OPS
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான ஜெயராஜ் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கதிரேசன் காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வெயில் கண்ணன் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது விருதுநகர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியமும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் இருந்த அமமுக மாவட்ட செயலாளர்களையும் முக்கிய நிர்வாகிகளையும் கே டி ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இணைத்த நிலையில் தற்போது முக்கிய நிர்வாகிகள் பலரை அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தினகரனின் பலமானது அந்த மாவட்டத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
English Summary
AMMK administrators join ADMK in front of OPS