அலங்காநல்லூர்: மொத்தம் இரண்டு கார்கள்.! 12 காளைகளை அடக்கிய கண்ணன்., 9.7/10 சந்தோஷ் காளை.!
alanganallur jallikattu 2021
மதுரை: அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சில வெளிநாட்டு கைக்கூலிகளால் தடை செய்யப்பட்டது.
பின்னர், மாணவர்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு, பல்வேறு தடைகளை தாண்டி தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்க மறுத்த காளைகளை நம் முரட்டுகளைகள் அடக்கி பரிசுகளை வென்றனர். முரட்டுகளைகளையும் முட்டி தள்ளிவிட்டு, வளர்த்தவருக்கு பெருமையையும் பல காளைகள் பெற்று தந்தன.
இந்நிலையில், இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் துடங்கி வைத்தனர். தற்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த வருடம் கார்கள், பைக்குகள், தங்கக் காசு, மோதிரம் உட்பட ரூ.2 கோடி பரிசு மழை வழங்கப்பட்டுள்ளது. குருவித்துறை சந்தோஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
9 காளைகளை அடக்கிய கருப்பண்ணன்-க்கு இரண்டு நாட்டு கறவை மாடுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு 12 மாடுகளை அடக்கிய கண்ணனுக்கு கார் வழங்கப்பட்டது.
English Summary
alanganallur jallikattu 2021