முக்கிய தலைவரை இழந்த காங்கிரஸ்!
ajooy kumar join in aam aadmi party
நடந்து முடித்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது, இதனால்அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அப்படி ராஜினாமா செய்தவர்களில் ஒருவர் தான் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார்.
இந்நிலையில், இன்று டெல்லி வந்த அஜோய் குமார், அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சந்தித்து அவரது முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இதையடுத்து மணிஷ் சிசோடியா மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, இந்தநிலையில், அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ajooy kumar join in aam aadmi party