அமைச்சர் சேகர்பாபு சொன்னது பொய்... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அதிமுக எம்எல்ஏ..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை அதிமுகவை சேர்ந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கேள்வி நேரத்தின் பொழுது  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கான அறநிலை துறை நிதி அதிகமாக உள்ளது. அதனைக் கொண்டு மாசாணியம்மன் கோவில் சுற்றுச்சுவர் உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் எனவும், அதேபோன்று வால்பாறையில் ஒரு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரூ. 4.5 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் நிறைவுற்றதாக பதிலளித்தார். இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்பொழுது அமைச்சர் சேகர்பாபு சொன்ன திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த எந்த திருப்பணிகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தவறான தகவலை அளித்துள்ளார். அவர் கூறியது போல எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA exposed Minister Sekarbabu statement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->