ஒத்த செங்கல் நாயகனுக்கு இந்த கதியா? உதயநிதியை கலாய்த்த ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நேற்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் சென்னை அடுத்த மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு வந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

அப்பொழுது மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டு கழிப்பிடம், குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதயநிதியை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான செய்தி பல ஊடகங்களில் நேற்று வெளியானது.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கலாய்க்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "ராயபுரத்திற்கு வந்த ஒத்த செங்கல் நாயகனுக்கு இந்த கதியா..?" என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் நேற்று வெளியான செய்தியின் வீடியோவையும் இணைத்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar criticizes Minister Udayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->