முன்னாள் அதிமுக எம்.பி குற்றவாளி என அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்.!
aiadmk ex mp case verdict in special court
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி கே.என் ராமச்சந்திரன் கல்லூரி விரிவாக்கத்திற்கு வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.எல்.ஏ எம்.பிகளின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது அப்போது, கடன் பெறுவதற்கு வங்கியில் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி ராமச்சந்திரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ராமச்சந்திரனின் மகன் ராஜசேகர், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு.
கல்லூரி விரிவாக்கத்திற்கு வங்கி கடன் பெற்று அதில் மோசடியில் ஈடுபட்டதாக கே.என்.ராமச்சந்திரன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
aiadmk ex mp case verdict in special court