இரட்டை இலை சின்னம் | மறுத்த தேர்தல் ஆணையம் - உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு!
AIADMK EPS vs OPS case by election
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று முறையீடு செய்துள்ளனர்.
அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையிட்டுள்ளது.
மேலும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் பழனிச்சாமியின் கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கையை ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தெரிவித்து விட்டீர்களா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்க்கு தகவல்கள் பகிர்ந்து கொண்டதாக பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்படி என்றால் திங்கள் கிழமை இந்த கோரிக்கையை மீண்டும் முறையிட அறிவுறுத்திய நீதிபதிகள், தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசினை செய்வதாக தெரிவித்தனர்.
English Summary
AIADMK EPS vs OPS case by election