தேர்தல் முடிந்ததும் செந்தில் பாலாஜி செய்ய இருக்கும் காரியம்!! உண்மையை உடைத்த அன்புமணி?! - Seithipunal
Seithipunal


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாமக சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் கந்தம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து  கொண்டு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் 

பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.முதலில் அதிமுக பின் அமமுக தற்போது திமுக தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே மக்களுக்கான நல்ல திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனின் வெற்றி உறுதியாகிவிட்டது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே அருமையான  திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை அப்படியே ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதலமைச்சர் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இதில் முதலமைசார் சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தமும். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நிறைவேறும்.

அதிமுக இந்த தேர்தலில் தோற்க வேண்டும் என்பது டிடிவி தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது அதிமுக கூட்டணி ஆசை என்னவென்றால், மக்களுக்கான நல்ல திட்டங்களை  கொண்டுவருவது , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என அதிமுக கூட்டணியின் எண்ணம் எல்லாம் மக்களின் வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது. ஆனால் ஸ்டாலினின் ஆசை எல்லாம் இந்த ஆட்சியை கவிழ்த்து எப்படியாவது தான் முதல்வராக வர வேண்டும் என்பது தான் அது நிச்சயம் நடக்காது என அன்புமணி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after election senthil balaji plan anbumani broke the truth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->