இடைத்தேர்தல் முடித்தவுடன் அனைவருக்கும் பணம்.! அமைச்சர் அறிவிப்பு.!!
after election money will be provided to everyone
சூலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது,இந்தநிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் திருப்பரங்குன்றதில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வறட்சி நிவாரண தொகையை வழங்க விடாமல் திமுக தடுப்பதாகவும் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் அந்த பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அது மட்டும் அல்லாமல் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார்
மேலும், வெளியூரில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்து எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளை செய்வதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
English Summary
after election money will be provided to everyone