அடுத்த தமிழக முதல்வர்! அதிமுக முக்கிய புள்ளி நடத்திய சிறப்பான சம்பவம்! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவு இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடந்து உள்ளது. இந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொள்ள அதிமுக இளைஞர் பாசறை மாநில துணைத் தலைவர், கோவை விஷ்ணு பிரபு நேற்று காலை அவரின் மனைவி மகன் உட்பட 5 பேருடன் தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் c.m.s. பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். 

பின் அங்கிருந்து அவர்கள் காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். கோவிலின் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன் நடந்த சுதர்சன யாகத்தில் பங்கேற்றனர்.

இந்த சிறப்பு யாகம் குறித்து, அதிமுக இளைஞர் பாசறை மாநில துணைத் தலைவர், கோவை விஷ்ணு பிரபு விஷ்ணுபிரபு தெரிவிக்கையில், ''வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக., வெற்றி பெறவும், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி தொடரவும், கொரோனா ஒழிந்து, மக்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தனை செய்தோம்,'' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk youngster deputy head poja in temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->