மனுஸ்மிருதி குறித்து அதிமுக வளர்மதி.! திருமாவளவனையும் விட்டு வைக்கல..!
admk valarmadhi speech about manusmiruthi
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பெண்கள் பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பேசியது கண்டிக்கத்தக்கது, அதே நேரத்தில் மநுஸ்மிருதி நூல் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சிதம்பரம் அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாடநூல் கழகத் தலைவருமான வளர்மதியின் குலதெய்வ கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைக்கும் வகையில் இன்று தனது குடும்பத்துடன் வளர்மதி கலந்து கொண்டார்.
வளர்மதி செய்ய்தியாளர்களிடம் பேசிய போது அவரிடம், திருமாவளவனின் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், " திருமாவளவன் பெண்கள் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள மனுஸ்மிருதி நூல் தடை செய்யப்பட வேண்டும்." என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
English Summary
admk valarmadhi speech about manusmiruthi