முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது பெருமையாக இருக்கிறது- அதிமுக எஸ்.பி வேலுமணி.!
ADMK SP Velumani speech about MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது பெருமையாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
கோவை பி.கே புதூர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூடடம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிமுக கொள்கை பரப்பு துணைசெயலாளர் நடிகை விந்தியா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் மீது கோபம்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு ஏதுனும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா? மூன்று முறை எனது வீட்டில் சோதனை நடத்தி விட்டார்கள். சோதனையில் மூலம் தொந்தரவு செய்கின்றனர்.
என் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்படி என்ன தான் கோபம், இருந்தாலும் ஒரு பெருமையாக உள்ளது. எனென்றால் என்னை எதிரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பது பெருமைதான் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK SP Velumani speech about MK Stalin