ஓபிஎஸ்.,க்கு கொலை மிரட்டல்.! முக ஸ்டாலின், கோட்டைமேடு தெரு லட்சுமி மீது புகார்.! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட லட்சுமி என்ற பெண், தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வதை 'கொலை செய்வேன்' என்று முக ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

தமிழக துணை முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுதற்காக லட்சுமி மீதும், தூண்டியதற்காக முக ஸ்டாலின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் திருமாறன், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அவரின் அந்த புகார் மனுவில், "தேனி மாவட்டம், அரண்மனை புதூர் ஊராட்சியில் அனுமதியின்றி நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில், கோட்டைமேடு தெருவை சேர்ந்த லட்சுமி என்பவர், மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பேச்சுக்களின் அடிப்படையில் அவர் மீதும், அதற்கு தூண்டுதலாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மீதும், தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து, மக்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் அத்துமீறி அனுமதி இன்றி மக்கள் கிராமசபை என்கிற பெயரில் நடத்தி வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மீதும், கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மீதும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK report to mk stalin and lakshmi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->