மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெள்ளியிட்டது அதிமுக!!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் திமுக சார்பில் கடந்த ஒன்றாம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி திமுக தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் மறுபுறமோ மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய அதிமுக இதுவரை மௌனம் காத்து வந்த நிலையில் அதிமுக  வேட்பாளர் பட்டியலை தற்போது வெள்ளியாகியுள்ளது முஹம்மது ஜான் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு.

மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன் மேட்டூர் நகரச் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார், இன்னொரு வேட்பாளரான முகமது ஜான் அதிமுகவின் சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் வேலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜான் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக அறிவிப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk rajysaba candidate announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->