மொத்தம் 20 ஆயிரம் கோடி ரூபாய்., சிறையில் தம்பி.! டிடிவி தினகரன் இப்படிப்பட்டவரா?! பரபரப்பு பேட்டி.!
ADMK pukazhenthi say about ttv
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுவந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆகி, தற்போது தமிழகம் வந்துள்ளார். கடந்த இரு தினங்களாக தமிழக அரசியல் கட்சிகள் சசிகலாவின் தமிழகம் வருகை குறித்தே பேசி வருகின்றனர்.
இந்நிலையில், சொந்த தம்பியை காசு செலவு செய்து காப்பாற்ற முடியாத தினகரன், தொண்டர்களை எப்படிக் காப்பாத்த முடியும் என்று அதிமுகவின் புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி தெரிவித்ததாவது,
"சொத்துக் குவிப்பு வழக்கில் வி கே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறைக்குச் சென்றனர், தற்போது சிறைத் தண்டனை பெற்று வந்த சசிகலா, இளவரசி இருவர் மட்டுமே சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளனர். தினகரனின் சகோதரர் சுதாகரன் எங்கு போய்விட்டார்? டிடிவி தினகரன் இடம் காசு பணம் இல்லையா?.
20 ஆயிரம் கோடி ரூபாய் டிடிவி தினகரன் வைத்திருப்பதாக ஏற்கனவே அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதிலிருந்து சொந்த தம்பிக்காக 10 கோடி ரூபாய் செலவு செய்தால் என்ன குறைந்தா போய் விடுவார் தினகரன்?.
தன் சொந்த தம்பியை சிறையில் இருந்து காப்பாற்றி கூட்டிவர ஆர்வமில்லாத தினகரன் தான், கட்சியிலுள்ள தொண்டர்களை காப்பாற்றப் போகிறாரா?" என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் புகழேந்தி, தினகரனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
ADMK pukazhenthi say about ttv