"ஒரே போஸ்டிங் தான் அது எனக்கு மட்டும் தான்"... அதிமுகவில் பாயும் பதவி யுத்தம்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர் லட்சுமணன், இவருக்கு எம்.பி பதவியும் வழங்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதா மறைந்த பிறகு லட்சுமணனை ஓரங்கட்டினாராம் உள்ளூர் அமைச்சர் சி.வி. சண்முகம். பின்னர் தலைமை இவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவிகொடுத்தாது. 

இதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் மவ்வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு விட்டது, அதே போல் கட்சி ரீதியாகவும் இரண்டாக பிரிக்கவேண்டும், மேலும் கடலூரை மூன்றாக பிரித்து போல், விழுப்புரத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்து மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்கிறாராம் லட்சுமணன். 

c.v.shanmugam, seithipunal

அவர் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது என்று கட்சியின் தொண்டர்களும் கூறுகிறார்கள். ஆனால், நமது இடைத்தேர்தல் நாயகன் அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன சொல்கிறாராம்.. இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஒரு போஸ்டிங் தான் அது எனக்கு மட்டும் தான் வேற யாரும் நினைத்து கூட பார்க்க கூடாது, என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இவரது பேச்சை கேட்ட மாநில தலைமையும் அமைதியாக இருக்கிறார்களாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk posting issue for villupuram district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->