தேவர் சிலை தங்கக் கவச விவாகத்தில் திடீர் திருப்பம் : இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கிலோ எடை உள்ள தங்க கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் குருபூஜையின் போது, இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பெட்டகத்தில் இருந்து பெறப்படும். குறு பூஜை முடிந்தபின் வங்கி பெட்டகத்தில் கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த வருடம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி உள்ளார். 

கடந்த வாரம் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்கள் திண்டுக்கல் சீனிவாசன் சமர்ப்பித்துள்ளார். இந்த கடிதம், ஆவணங்கள் குறித்து தனியார் வங்கி நிர்வாகம், தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் நீடிப்பதாக கூறி, ஓபிஎஸ் தரப்பினர் வங்கியில் கடிதம் வழங்கியுள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களான தர்மர் எம்.பி, முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நீராடியாக வங்கியில் கடிதத்தை வழங்கி உள்ளனர். அந்த கடிதத்தில், தேவர் சிலை தங்கக் கவசத்தை ஓபிஎஸ் இடம் கொடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS vs EPS Devar Thanka Kavasam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->