அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ், வெளியான அறிவிப்பு.!
admk ops, eps rally announced for mgr memorial day
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 32-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நம்மை எல்லாம் துயரத்தில் ஆழ்த்தி விட்டு நம்மை அமரர் ஆகிய நாள் 24.12.1987 . எம்ஜிஆர் அவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2019 செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
அதனை தொடர்ந்து எம்ஜிஆர் அவர்களின் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக எம்ஜிஆர் மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பம், வர்த்தக அணி மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
admk ops, eps rally announced for mgr memorial day