அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் இவர்தான்? அதிர்ச்சியில் அதிமுகவினர் மற்றும் அமமுகவினர்.! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

தற்போது சசிகலா சிறை சென்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஆறு மாதம் சசிகலா சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை 4 ஆண்டுகள் அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. 

ஆனால் அவர் இன்னும் வெளிவரவில்லை.  3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்துள்ளார். சசிகலாவிற்கு ஒரு ஆண்டுகள் மட்டுமே தண்டனை உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பிரச்சினை தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நியூஸ் கிளிட்ஸ் சேனலில் பிரபல ஜோதிடர் பொதுவுடை மூர்த்தி பேட்டி அளித்தார். அப்போது,  அவரிடம் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோதிடர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியில் தற்போது எந்த மாற்றமும் ஏற்படாது. 

ஜூலைக்கு பிறகு தமிழக அரசியல் மாற்றம் ஏற்படும். ஓபிஎஸ் இபிஎஸ், ஓபிஎஸ் எடுக்கும் முடிவுகள் அவர்கள் கையில் இருக்காது. சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் குளறுபடி ஏற்படும் என கூறினார். அதிமுகவின் வெற்றிக்கு ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகியோரின் முடிவுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறினார். 

அதன்பிறகு, சசிகலா மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலாளராக வாய்ப்பு இருக்கிறதா? என கேள்விப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிடர், அதிமுகவின் அரசியல் வாழ்க்கையில் சசிகலா பெரிய மாற்றத்தை கொடுப்பார். தற்போது இல்லை என்றாலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பொது செயலாளர் பதவியில் அமர வாய்ப்புள்ளது. சசிகலாவிற்கு 2020 ஆம் ஆண்டு கட்சி பதவி மிகப்பெரிய பிரம்மாண்டத்தை கொடுக்கும் எனக் கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk next general secretary for sasikala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->