அதிமுகவில் களமிறக்கப்பட்ட புதிய படை! இனி இவர்கள் தான் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில், ஒற்றைத்தலைமை, இரட்டை தலைமை என சர்ச்சை உண்டானது. இதனை பயன்படுத்தி கொண்ட திமுக சார்பு ஊடகங்கள் அதிமுகவில் கலகத்தை உண்டாக்க முயற்சி செய்தது. நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுக செய்திதொடர்பாளர்கள் ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ பேட்டியோ  பதிவுகளோ அளிக்கக்கூடாது என தடை விதிதத்து. 

இன்று அந்த தடையை விலக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதோடு இல்லாமல் புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், " “அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கட்சியின் தலைமை கழகத்தில் இருந்து மறுஅறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகைகளிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம், என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் அனைவரும் வருகின்ற ஜூலை 1 முதல் தங்களுடைய பணியை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு ஒபிஎஸ், இபிஎஸ்  அறிவித்துள்ளனர்.

அதோடு செய்தி தொடர்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk new spoke person team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->