அதிமுக முன்னாள் எம்எல்ஏ., மனைவி, மகள் மீது வழக்கு பதிவு!
ADMK Nanjil Muruhesan
பணமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
33 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், அவரின் மனைவி, மாநகராட்சி கவுன்சிலரான மகள் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செந்தில் குமார் என்பவர் அளித்த புகார் பேரில் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாஞ்சில் முருகேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நாகர்கோவில் அருகே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் வாங்குவதற்காக, இரண்டு தவணையாக 33 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மீத தொகையை செலுத்தி நிலத்தை வாங்க முயற்சித்த போது, காலம் தாழ்த்தி தன்னை ஏமாற்றியதாக செந்தில் குமார் புகார் அளித்ததன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், அவரின் மனைவி தங்க தேவிகா, மகள் (நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர்) மற்றும் வினோ தேவகுமார் ஆகிய நான்கு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.