திடீரென ஓங்கும் ஓபிஎஸ் கை.! அமைச்சர்களின் உஷார் நடவடிக்கை.. எடப்பாடிக்கு ஏமாற்றம்.?! - Seithipunal
Seithipunal


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிறகு அமைச்சர்கள் மத்தியில் திடீர் மரியாதை ஏற்பட்டுள்ளது. 

கடந்த 18ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் அறிவித்தபடி ஆட்சியையும் கட்சியை வழிநடத்த குழுவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமி இப்பொழுது அந்த குழு அமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தாராம். 

இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்று பல்வேறு கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. பல கூட்டங்களில் அமைதியாக இருந்த ஓபிஎஸ் இதுவரை அப்படி பேசியதே இல்லை அவரது இந்த பேச்சை கேட்டு கட்சி நிர்வாகிகள் பலரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சமீபத்திய நிகழ்வுகளில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறதாம். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறுதியிடாத நிலையில், யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது என்று அமைச்சர்கள் நினைப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ministers respect to ops


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->