அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனின் அலுவலகத்தில் புகுந்து கடத்தப்பட்ட அதிர்ச்சி..! உடுமலையில் பதற்றம் நிலவி வருகிறது..!
admk minister personal assistant kidnap
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரக இருந்து வருபவர் உடுமலை இராதாகிருஷ்ணன் இவரது சட்டமன்ற அலுவலகம் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளது.
இந்நிலையில், அன்சாரி என்ற பகுதியில் உள்ள அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனின் சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அமைச்சரின் உதவியாளர் கர்ணனை கடத்திச் சென்றுள்ளனர்.
அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்த உதவியாளர் கர்ணனை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று காருக்குள் தூக்கி போட்டு கொண்டு சென்றுள்ளனர். உதவியாளர் கர்ணனை வலுக்கட்டாயமாக கடத்தி செல்வது அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது.
அமைச்சரின் உதவியாளர் கர்ணன் காரில் கடத்தப்பட்டது தொடர்பாகக் காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால் உடுமலை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தனது சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்து பட்டப்பகலில் தனது உதவியாளரை கடத்தி சென்றதால் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
English Summary
admk minister personal assistant kidnap