எடப்பாடியருக்கு அமைச்சர் கொடுத்த மாஸ்டர் பிளான்.. திமுகவின் அனைத்து திட்டங்களும் காலி.. அதிர்ச்சியில் ஸ்டாலின்.!!
admk minister master plan for delta
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு சட்டம் அகப்படுமா என்று எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்
இந்த அறிவிப்பின் பின்னணியில் அதிமுக அமைச்சர்களின் யோசனை இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்டா மாவட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய அமைப்புகள் அரசுக்கு எதிராக திரட்டி வருவதால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் எதிர்க்கட்சிகளின் அரசியல் திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் என அமைச்சர் கொடுத்த யோசனையை முதலமைச்சர் அப்படியே அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஒரே ஒரு அறிவிப்பால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது.
English Summary
admk minister master plan for delta