நான் கூட சூர்யாவை தப்பா நினைச்சிட்டேன்..! - வருத்தத்தில் அதிமுக அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த விழா ஒன்றில் சூர்யாவைப் பற்றி தான் தவறாக நினைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காயத்ரி என்ற மாணவி தன்னுடைய வாழ்வின் கஷ்டங்களையும், அதை தாண்டி கல்வி பயில சூர்யாவின் அறக்கட்டளை எவ்வாறு பயன்பட்டது என்பது குறித்தும் பேசி அனைவரையும் நெகிழ வைத்தார்.

Image result for sengottaiyan seithipunal

அதன் பின்னர் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ‘ நான் சிங்கம் படத்தில் வில்லன்களை சூர்யா அடிப்பதைப் பார்த்து இவருக்கெல்லாம் மனித நேயம் இருக்குமா என்று நினைத்தேன். ஆனால் தற்போது சூர்யா செய்யும் உதவிகளைப் பார்த்து அவரைப் பற்றிய பிம்பம் என்னுடைய மனதில் மாறிவிட்டது.  அடுத்த வாரத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் 45 நிமிடம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk minister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->