வெளியான பரபரப்பு அறிக்கை.. அதிர்ச்சியில் அதிமுகவினர்.! உற்சாகத்தில் சசிகலா.!! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் இருந்து விடுதலையானதும் தீவிர அரசியலில் இறங்குவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் சசிகலா அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், சிறையில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலா, அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு பலரையும் அதிர்ச்சி உள்ளாக வைத்தார். 

இதனியையே, கடந்த 4 நாட்களுக்கு முன்பு சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள், நான் விரைவில் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்துவிடுவேன் என கூறியிருந்தார். அதேபோல் நேற்று முன்தினம் வெளியான ஆடியோவில், எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும் என ராசிபுரம் அமமுக தொண்டரிடம் பேசியிருந்தார். ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுகவிற்குள் சசிகலா வரமுடியாது என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மீட்டு  சசிகலாவின் ஒற்றைத்தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல், எம்ஜிஆர் மாநில கழக துணைச் செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருக்கும்வரை அதிமுக அழிவை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk member statement for sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->