சென்னையில் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு.. சோகத்தில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் நேற்று மட்டும் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வண்ணார்பேட்டை சேர்ந்த 47 வயது அதிமுக நிர்வாகி, 10 நாட்களுக்கு முன்பு ராயபுரம் பகுதியில் நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் திருவேற்காடு அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் உயிரிழந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk member death in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->