சிறையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்.. பரபரப்பில் அரசியல்களம்.!! - Seithipunal
Seithipunal


நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடிய நிலையில், அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தினை நாடினார். முன்ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். 

பின்னர் நடிகை அளித்த மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முன்ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மணிகண்டன் தலைமறைவாகி  இருந்தார். நேற்று காலை அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கார் மூலமாக விசாரணைக்காக சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் கைதான 2 உதவியாளர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு சைதாப்பேட்டை கிளைச் சிறையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister manikandan jailed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->