#BigBreaking || தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பரபரப்பு புகார்.! ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு குறித்து மனுவில் வெளியான தகவல்.!
ADMK EPS Appeal to EC for ops Stand
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் புகார் அளித்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அதற்கு விளக்கம் அளித்து பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்றும், விதிகளை மீறி அவைத்தலைவர் தேர்வு மற்றும் 11ம் தேதி பொதுக்குழு கூட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதில் மனு ஒன்றை அளித்துள்ளது.
அந்த மனதில் ஓ பன்னீர்செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
மேலும், பெரும்பான்மையான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Appeal to EC for ops Stand