அதிமுகவில் அதிரடி மாற்றம்! அமைச்சர்கள் விடுவிப்பு! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!
admk district secretaries changed
அதிமுக அமைப்பில் மாற்றங்களை செய்து அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தினை அமைப்பு ரீதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சி.த.செல்லப்பாண்டியனை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக கடம்பூர் ராஜூவையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏவையும் நியமனம் செய்து அதிமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு, அந்த பொறுப்பில் பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அர்ஜுனன் எம்பி விடுவிக்கப்பட்டு, அந்த பொறுப்பில் அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த புத்திசந்திரனை நியமனம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுவரை அதிமுக அமைப்பு செயலாளர்களாக இருந்த புத்திசந்திரன், சண்முகநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக உடுமலை ராதாகிருஷ்ணன், சி த செல்லபாண்டியன், அர்ஜுனன் எம்பி ஆகியோரை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுளள்து.
English Summary
admk district secretaries changed