#BigBreaking | என்ன தடை? எதற்கு தடை? உச்சநீதிமன்றம் இறுதியாக சொன்னது என்ன? முழு விவரம் இதோ  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் தரப்பில், "கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தான் தயாராக இருந்தேன். ஆனால் என்னை வேண்டாம் என்று வெளியே தள்ளி முடிவெடுத்து விட்டனர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது. இதை டிவிஷன் பெஞ்ச் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பொதுக்குழு கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்கவில்லை" என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமான மேலும் சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வருகின்ற தசரா பண்டிகை முடிந்த பிறகு விசாரித்து கொள்ளலாம். அப்போது இரு தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்க்கு ஓபிஎஸ் தரப்பு, "எதிர் மனுதாரர் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும். எங்களுக்கு இடைக்கால நிவாரணமாக உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது நீதிபதிகள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஏன் இவ்வளவு அவசரம். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கின் முடிவு வெளியாகும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறாது என்று உறுதி அளித்தனர்.

இதனையடுத்து ஓபிஎஸ் மேல்முறையீடு குறித்து விரிவான பதில் அளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK case SC order sep 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->