️அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவிப்பு.!!
admk appointment for election officers
உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் :
செங்கல்பட்டு - நந்தம் விஸ்வநாதன் - எம்எல்ஏ, கழக அமைப்புச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் (முன்னாள் அமைச்சர்)
வேலூர் - சேவூர் ராமச்சந்திரன் - எம்எல்ஏ, கழக அமைப்புச் செயலாளர், (முன்னாள் அமைச்சர்), முக்கூர் சுப்பிரமணியன் - கழக அமைப்புச் செயலாளர், (முன்னாள் அமைச்சர்)
திருநெல்வேலி - ராஜலட்சுமி - கழக மகளிர் அணி துணைச் செயலாளர், (முன்னாள் அமைச்சர்), கோபாலகிருஷ்ணன் - (முன்னாள் எம்பி), கழக வழிபாட்டு குழு உறுப்பினர், கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர், ராஜேந்திரன் (முன்னாள் எம்எல்ஏ) கழக அமைப்புச் செயலாளர்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சார்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
admk appointment for election officers