முதலில் அதிமுக.. அடுத்து திமுக கூட்டணி கட்சி.. அடுத்தடுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.!!
admk and vck walkout from tn assembly
ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ் தாய் வாழ்த்து படப்பட்டதும், பிறகு ஆளுநர் ஆங்கிலத்தில் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அம்மா மினி கிளினிக் மூடல், அம்மா பல்கலைக் கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
English Summary
admk and vck walkout from tn assembly