தினகரனின் அமமுகவை பின்பற்றும் திமுக, அதிமுக.! அதிமுகவில் நிகழப்போகும் மாற்றத்தால் நிர்வாகிகள் மகிழ்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தைத் தங்கள் கட்சியின் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரித்து, தனித்தனி மாவட்ட செயலாளர்களை அ.ம.மு.கவில் தினகரன் நியமனம் செய்தார். இதேபாணியில் அண்மையில் தி.மு.க.வும் திருச்சி மாவட்ட தி.மு.கவை மூன்றாக பிரித்து அன்பில் மகேஷுக்கும் மாவட்ட செயலாளர் பதவியைக் கொடுத்தது. இந்த அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்த அ.தி.மு.க.வும் தற்போது திருச்சியை மூன்றாக பிரித்து, உபரி மாவட்ட செயலாளராக பரஞ்ஜோதியை நியமனம் செய்துள்ளனர். 

இதே பாணியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் ஒரு புது மாவட்டத்தை உருவாக்கி, பலரையும் மாவட்ட செயலாளராக்கும் முடிவிலும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலை தடுக்கவும், அதிமுகவில் நீண்ட காலமாக பணியாற்றி கட்சி பதவி கிடைக்காத சீனியர்களுக்கு பதவி கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் அதிமுக தலைமை இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk and dmk follow ammk strategy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->