3 சீட்டு, இரட்டை இலை சின்னம்., அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி.! வெளியான தகவல்.!
ADMK ALLIANCE TMMK
நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. நேற்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும் பாஜக, தேமுதிக, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுகவிடம் 3 தொகுதிகள் கேட்க உள்ளதாகவும், அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.