பெற்ற தாய், தந்தைக்கு எதிராக நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய்.! குடும்பத்துக்குள் கும்மாங்குத்து.!
actor vijay against parents
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலின் அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தேர்தலுக்கான வேட்புமனு கடந்த செப். 15 முதல் தொடங்கி உள்ளது. செப்.22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது.
செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் இந்த உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தனது பெயரை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
தந்தை சந்திரசேகர், தாய் உட்பட 11 பேரை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள நடிகர் விஜய், தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி, சென்னை குடிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இந்த மாதம் இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் சர்ச்சைகள் வரும் என்று எதிர்பார்க்கலாம். ரசிகர்களை வைத்து நடிகர் விஜயும் பிழைக்க ஆரம்பித்துவிட்டார் போல.,
English Summary
actor vijay against parents