பாக்ஸர் அங்கிள்.. உங்க வேலைய பாருங்க.. அதிமுகவையும், அமைச்சர் ஜெயக்குமார் பங்கப்படுத்திய நடிகர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சித்தார்த் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமின்றி சமூக பிரச்சினைகளுக்கும் தன்னுடைய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து குறித்து நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்தார்.

அதில் அதிமுகவையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசையும் கடுமையாக சாடினார். சமீபத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சித்தார்த் யார் எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கேட்டார். 

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் பதிவு செய்தவை, என்னை யாரென்று அவர் கேட்டுள்ளார். ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடைய அரசு 2014 ஆம் ஆண்டு சிறந்த நடிகர் என்ற விருதை எனக்கு வழங்கி உள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவித்த விருது இன்னும் கொடுக்கப்படவில்லை. 

நான் நேர்மையாக சம்பாதித்து எந்த இடத்தில் உள்ளேன்? வரி செலுத்தும் குடிமகன்களை அவமானப்படுத்தி பேசியே தான் நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் பாக்ஸர் அங்கிள். நீங்கள் ஒண்ணும் என்னை பெரிய ஆளாக தேவை இல்லை. உங்கள் வேலையை பார்க்கவும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பம்பர கண்ணாலே படத்தில் வரும் வடிவேலு காமெடியை வைத்து கலாய்த்து உள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor siddharth tweet about minister jayakumar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->