தொடரும் அவலம் : ஆற்காடு மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்ட கால்வாய்! - Seithipunal
Seithipunal


ஆற்காடு அருகே மின்கம்பங்கள் இடையூறாக இருப்பதை அறிந்தும், அதை அகற்றாமல் கால்வாய் அமைப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் மின்கம்பங்களை அகற்றாமல் சாலை போடுவதும், வடிகால் வாய்க்கால்களை அமைப்பதும் வடிக்கையாகிவரும் நிலையில், தற்போது மீண்டும் அதுபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டை கிராமத்தில் கடந்த சில தினங்களாக புதிய கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றாமல், கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தண்ணீர் ஓடுவதற்கு பயன்படும் கால்வாய்களுக்கு நடுவே மின்கம்பம் இருப்பதால், அந்த பகுதி வாசிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், கால்வாய்க்கு நடுவே இருக்கும் இந்த இரு மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aarkadu near drainage Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->