அப்பா- மகன் சண்டை.. சமாதானம் செய்ய சென்ற சித்தப்பாவிற்கு நிகழ்ந்த கொடூரம்..!
A Man Murder Near Thiruvavur
குடிபோதையில் அப்பா மகன் சண்டையிட்டது சமாதானம் செய்யச் சென்ற சித்தப்பா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் குமார் இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது அவரது அண்ணன் ஜெயபாலுக்கும் அவரது மகன் பிரபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இருவரும் மது போதையில் இருந்ததால் குமார் அவர்களை சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்போது பிரபாகரன் ஆத்திரத்தில் எனது சித்தப்பா குமாரை உதைத்ததில்குமாரும் மயங்கிச் அறிந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . தந்தை மகன் சண்டையை விலக்கச் சென்ற சித்தப்பாவை எட்டி உதைத்ததில் அவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
English Summary
A Man Murder Near Thiruvavur