ரஜினி அரசியலுக்கு வருவாரா? செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் தனுசின் அதிரடியான பதில்….!
A bite with actor Dhanush about Rajni
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தாருடன் சாமி கும்பிடச் சென்றிருந்தார் நடிகர் தனுஷ். அவருடன் அவருடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் அவருடைய மனைவி வந்தனா ஆகியோர் வந்திருந்தனர்.
300 ரூபாய்க்கான கட்டண வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். அவர்கள் வெளியே வந்த போது, தனுஷை சந்தித்த செய்தியாளர்கள், அவரைப் பேட்டி எடுத்தனர்.
அப்போது தனுஷ், “எனது அடுத்த படம் அசுரன். அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” என்றார்.
நடைபெற இருக்கும் தேர்தலில் ரஜினி போட்டியிடுவாரா? அல்லது, எந்தக் கட்சிக்காவது, ஆதரவுக் குரல் கொடுப்பாரா? அரசியலுக்கு வருவாரா? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு தனுஷ்,
“நான் குடும்பத்தோடு சாமி கும்பிட வந்திருக்கிறேன். அரசியலைப் பற்றி பேச விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி அவரே உங்களிடம் தெரிவிப்பார், என்று கூறி விட்டு, கிளம்பிச் சென்று விட்டார்.
English Summary
A bite with actor Dhanush about Rajni