இடஒதுக்கீடு விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதில்.!
69 percentage reservation issue
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இதனை ஏற்றுக்கொன்ற உயர்நீதிமன்றம் உண்டானாக இதனை செயல்படுத்த உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021 -2021 கல்வி ஆண்டில் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை அடுத்த வாரம் (இன்று) தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
69 percentage reservation issue