3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு.!
3 IAS officers transfer
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலராக பதவி வகிக்கும் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை ஆணையர் ஷன்சொங்கம் ஜடாக் சிரு மாற்றப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்." என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.