21 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி வாகை சூடிய கல்லூரி மாணவி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27ந் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 76 புள்ளி ஒன்று ஒன்பது சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, 46 ஆயிரத்து 639 ஊரக ஊராட்சித் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்தல் நிறைவடைந்தது.

டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 9624 ஊராட்சிமன்ற தலைவர், 76746 ஊராட்சிமன்ற உறுப்பினர், 5,090 ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் 515 மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை 210 வாக்குகள் வித்தியாசத்தில் சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 age college student elected as president


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->