தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.!
2026 BJP should rule in tamilnadu Annamalai
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மைலாப்பூரில் "திராவிட மாயை" என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு பின் பேசியதாவது, 2024-ம் ஆண்டு என்பது தமிழகத்தின் மைல்கல்லாக இருக்கப்போகிறது. காரணம் பிரதமர் மோடி மாடல், தேசிய மாடல், பாஜக மாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் ஏராளமானோர் பாஜகவில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். தேசியத்தின் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். தற்போது வெள்ளம் என்பது அதிகப்படியாக வர ஆரம்பித்துள்ளது. இந்த வெள்ளத்தை சரியாக ஆராய்ந்து முறையாக கொண்டு சென்று விட்டோம் என்றால் 2026 ஆஃப் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி என்பதை யாராலும் தடுக்க முடியாது.
கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைத்து தீரும் என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சியை ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. திமுகவை அழிப்பது என்பது மிகவும் சுலபமான வேலை, சக்கரவியூகம் போல் செயல்பட்டு வருகிறது. பொய்யை திரும்பத் திரும்பக் கூறுவதை ஒரு வட்டமாக வைத்திருக்கிறார்கள்.
திமுக ஒரு வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. தமிழகத்தில் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது என்றும் தமிழகத்தில் சாதிய அடிப்படையில் ஆணவக்கொலைகள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
2026 BJP should rule in tamilnadu Annamalai