சிக்கலில் சிக்கிய மு.க. ஸ்டாலின்.. புதிதாக ஸ்டாலின் மீது இரண்டு வழக்குகள்.. விரைவில் விசாரணை..!
2 cases on mk stalin
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரு அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மு. க. ஸ்டாலின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது முகநூலில், அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக முக ஸ்டாலின் மீது வழக்கு தொடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.