அன்புமணி, மன்மோகன் சிங், ப சிதம்பரம் உள்ளிட்ட 14 எம்.பி.,க்கள்! வெளியான அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த 14ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. 

கொரோனா நோய் பரிசோதனை, சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடுகளுடன் இந்த மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

மாநிலங்களவை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களவை மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்று வருகிறது. கொரனோ தொற்று பரவல் காரணமாக 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஏற்கனவே அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வில்லை.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி, ப சிதம்பரம் உள்ளிட்ட 14 எம்பிக்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பதினான்கு எம்பிக்களுக்கும் தற்போது விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 14  எம்.பி.,க்களில்  11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 mp leave in parliament


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->